பேருவளை “மருதானை செரிடி” அமைப்பினால் உள்ளக கிராமங்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை!

Date:

அண்மையில் பேருவளை Maradana Charity “மருதானை செரிடி” அமைப்பு பேருவளையில் உள்ள பல கிராமங்களின் புள்ளிவிபர தரவுகள் சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தது.
மருதானை, அரப் வீதி, ஹெட்டியாகந்தை, ஹேனவத்தை, கபடாகொட, வத்ஹிமிராஜபுர, கொரகாதுவ, கொடவத்தமலை, மாளிகாஹேனை, பண்டாரவத்தை, ஷேக் அப்துல் முஹீஸ் மாவத்தை போன்ற கிராமங்களின் தரவுகளே சேகரிக்கப்பட்டது.

கிராமங்களிலுள்ள சனத்தொகை, முதியோர் எண்ணிக்கை, சிறுவர்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை, விதவைகள் மற்றும் அனாதைகளின் எண்ணிக்கை என பல்வேறு முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இப்பணியில் ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், உயர்தர மாணவர்கள் என பல்வேறுபட்ட மாணவர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் திரட்டல் மூலம் Maradana Charity அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்களை இலகுவான முறையில் மேற்கொள்ளுவதற்கு உதவியாக அமையுமென Maradana Charity அமைப்பின் பொதுச்செயலாளர் ரூமி ஹாரிஸ் தெரிவித்தார்.

இந்தப் புள்ளி விபரங்கள் அடங்கிய Mobile App விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த Mobile App இனை Maradana Charity உறுப்பினரும், இளம் தொழில்நுட்பவியலாளருமான சஹ்மி அஹமட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...