சீனாவில் குடியிருப்பு ஒன்றில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலி!

Date:

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று (13) எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விபத்தில் 138 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இதன் காரணமாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் என ஏராளமானோர் இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்த சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் இரத்தம் வெளியேறியுள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...