அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அவசியமானது – நியாயப்படுத்தி ஜனாதிபதி ஊடக அறிக்கை

Date:

எரிபொருள் விலைஅதிகரிப்பு அவசியமானது,ஏனைய சமூக பொருளாதார நன்மையளிக்கும் இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொதுவான தந்திரோபாயத்தின் ஒரு அம்சமே விலை அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வங்கி முறையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது,குறைந்த வட்டிவீதத்தை பேணுவதை. வெளிநாட்டு நாணயத்தை செலவிடுவதை குறைப்பதை நோக்கமாக கொண்டது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது மக்களின் சுகாதாரம் நலன்புரி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தீர்மானம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு இறக்குமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை, முதலீட்டை அடிப்படையாக கொண்ட, நுகர்வோர் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட ,அல்லது உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்த தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான பல காரணங்கள் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பது இதற்கான ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த அதிகரிப்பு தொடரும் என்பதை சந்தை போக்குகள் புலப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களிற்காக பெருமளவு அந்நிய செலாவணியை செலவிடும் நாடாக இலங்கை காணப்படுகின்றது மேலும் பல சேவைகள் இந்த இறக்குமதியை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...