இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை வடக்கு கடற்பரப்பில் இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் மீன்வளம் அதிகரிக்கும். எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கைய தடுக்குமாறு கோரி நாளை (16) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராமேஸ்வரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் குறிப்பிட்டுள்ளார்.