பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது!

Date:

பாடசாலை மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பாடசாலை விரைவில் திறக்க அரசு விரும்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். எனினும் பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்திற்காக சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவ்வாறு பாடசாலைகளை மீளத் திறக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக் கலந்துரையாடல்கள நடத்தப்படும் என்றும் கூறினார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற் கொண்டார். இக்கலந்துரையாடலில் மாகாண அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக நாங்கள் அனைத்து பாடசாலைகளையும் மூட வேண்டியிருந்தது. இருப்பினும், ஒன்லைன் கல்வி என்பது எந்த வகையிலும் ஆசிரியகள் வகுப்பறையில் மேற்கொள்ளும் கற்பித்தலைப் போன்று திருப்திகரமானதல்ல.

பாடசாலைகளைத் திறப்பபத்கு ஆயத்தப்படுத்த நீண்ட நேரம் எடுக்கும். விசேட மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் முதல் படி கல்வித் துறைசார்ந்த அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதாகும் என்றார்.

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவை. தடுப்பூசி ஆசிரியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பெற்றோரின் நம்பிக்கையையும் வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...