குடும்பத்தினர்,சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல் கவிஞர் அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்!

Date:

அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல் அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில்,ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் என்பவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக் கொள்ளத் தகுந்த ஆதாரங்களுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 400 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவரது உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிக மோசமாகவும்

மனிதாபிமானமற்ற விதத்திலும் அஹ்னாப் ஜசீம் நடத்தப்பட்டிருக்கிறார். இக்காலப் பகுதியில் அவரை வற்புறுத்தி பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கும் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.அஹ்னாப் ஜசீம்

கைதுசெய்யப்பட்டதிலிருந்து சுமார் 10 மாதங்கள் வரையில் சட்ட உதவியை நாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் சட்ட உதவியைப் பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டபோதிலும்

அவருக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. அதுமாத்திரமின்றி அஹ்னாப் ஜசீமின் குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் அவரை உரிய தினங்களில் அணுகுவதற்கும் தடையேற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில், அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல், அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...