எம்மால் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்!-பவித்ரா நம்பிக்கை!

Date:

கொவிட் கட்டுப்பாட்டிற்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை வழங்கியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

களுத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்காவிடின் நாட்டை காப்பாற்றுவது கடினம் என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இது தொடர்பில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

முதலாவது மற்றும் இரண்டாவது கொவிட் அலையினை கட்டுப்படுத்தியது போல மூன்றாவது கொவிட் அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான பணி அல்ல என தெரிவித்த அமைச்சர் எம்மால் நாட்டை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...