கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து அரசை வன்மையாக கண்டித்த சுமன பிரேமச்சந்திர

Date:

கொலை குற்றவாளியான துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி வன்மையாக கண்டித்துள்ளார்.

கொலை குற்றத்துக்காக 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில்வா, இன்ற ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் சுமன பிரேமச்சந்திர தெரிவிக்கையில், “கொலையாளி வெளியே. நீதியை மதிக்காத நாட்டின் மீது சூரியன் ஒரு போதும் பிரகாசிக்காது”

மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இலங்கையில் அனுசரிக்கப்படும் சிறப்பு பெளத்த பண்டிகையான பொசொன் போயாவின் புனித நாளில் இந்த அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் சுமன பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...