கொலைக் குற்றவாளி துமிந்தவின் விடுதலை நாட்டின் ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது -இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதிருப்தி!

Date:

கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், எனினும் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சம அணுகல் என்பது ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும். இவற்றை இலங்கையும் ஏற்றுள்ளது என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...