முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்து அணி வசமானது

Date:

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேலும், இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களைக் கொடுத்து, 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

அந்த அணி சார்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்போட்டி இங்கிலாந்து அணி வசமானது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...