மஹர, வெலிகடை சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு!

Date:

வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், சிறைச்சாலை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கைதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை தொடர்ந்து தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கைதிகள் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...