புத்தளம் தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!

Date:

புத்தளம் மதுரங்குளி விருதோடை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (03) காலை 10.30 மணியளவில் தீ ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன் போது பொதுமக்களின் உதவியுடன் முப்படையினர், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய நகர சபைகளின் தீயணைக்கும் பிரிவினர், கடற்படையின் தீணைக்கும் பிரிவினர் கூட்டாக பல மணி நேரப் போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலையில் உள்ள பல இயந்திரங்கள் தீகக்கரையாகியுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பல ரூபா பெறுமதிக்க தும்பும் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

 

குறித்த தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இவ்வாறு திடீரென தீப்பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான மேலதிக விசாரனைகளை புத்தளம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, தீயினால் எரிந்த தும்பு தொழிற்சாலையை புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...