கொக்காவில் தாக்குதலின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Date:

1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று (11) மாலை 5 மணியளவில் கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில் இடம்பெற்றது.

 

652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

நிகழ்வில் வன்னி இராணுவ படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதோடு 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் இராணுவ வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...