LTTE அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

Date:

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட  ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.
பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டாரினால் நாடு கடத்தப்பட்டார், திருகோணமலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...