உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Date:

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது.

 

பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

 

இதனையடுத்து, இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

 

இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.

 

அதற்கமைய, உதயகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...