உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Date:

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது.

 

பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

 

இதனையடுத்து, இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

 

இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.

 

அதற்கமைய, உதயகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...