அடுத்த மாதம் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வரவுள்ளது

Date:

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன.இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடியளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.

ஆகஸ்ட் மாதம் 4 – 8 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயர்வடையவுள்ளது.

இவற்றில் 27 இலட்சம் தடுப்பூசிகள் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...