பி.ஸீ. ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிக்க அரசு நடவடிக்கை!

Date:

பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

 

தற்போது 9,950 ரூபா தொடக்கம் 50,000 ரூபா வரை

நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு முறையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

 

இதனால் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைக்கு அறிவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து

அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக அடுத்த வாரமளவில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...