பி.ஸீ. ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிக்க அரசு நடவடிக்கை!

Date:

பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

 

தற்போது 9,950 ரூபா தொடக்கம் 50,000 ரூபா வரை

நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு முறையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

 

இதனால் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைக்கு அறிவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து

அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக அடுத்த வாரமளவில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...