கிளிநொச்சியில் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Date:

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி நிருபர் 

சப்த சங்கரி

Popular

More like this
Related

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை.

இன்றையதினம் (22) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை...