அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

Date:

நாளை(15) முதல் அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

 

அம்பலாந்தோட்டை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் இருந்து அம்பலாந்தோட்டை நகருக்கு மக்கள் அதிகளவில் வருவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தவும் பின்னர் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு விற்பனை நிலையங்களை திறப்பதா அல்லது தொடர்ந்தும் மூடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அம்பலாங்கொடை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...