ஹெய்டியில் பாரிய நிலநடுக்கம்! 300 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Date:

ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினால் 1800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, ஹெய்டியில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என    ஊகிக்கப்படுகின்றது.இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...