அமைச்சரவையில் மாற்றங்கள் | முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு

Date:

முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.

எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே முக்கிய அமைச்சர்கள் சிலரை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...