கொவிட் தொற்று காரணமாக தற்போது சிறுவர்களின் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதேவேளை நாவல பகுதியைச்சேர்ந்த தரம் -07 மாணவன் ஒருவன் கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
அதேபோல், 12 வயது சிறுமி ஒருவரும் மரணமடைந்துள்ளார்.மேலும் சிறுமிக்கு லேசான நோய் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளையில் மரணமடைந்துள்ளார், பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
ராஜகிரியவில் வசிக்கும் அச் சிறுமியின் தாயார், தங்கள் குழந்தைகளை வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.
மேலும், “கொரோனா என் குழந்தையை அழைத்துச் சென்றது. என் குழந்தைக்கு நடந்தது யாருக்கும் நடப்பதற்கு நன் விரும்பவில்லை” எனவும் கொவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுமாரும் அவர் கூறினார்.