சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வு!

Date:

சிலாபம் கொக்கவில தடுப்பூசி வழங்கும் மையத்தில் 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் (phizer) பயோஎன்டெக் (BioNTech) கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சிறப்பு ஆலோசகர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மக்களுக்கு நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபம் கொக்கவில அரச பாடசாலையின் தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு மருத்துவரின் குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் சுகாதார அலுவலர் (MOH) துறையுடன் இணைந்த வைத்தியர் அருள்தேவி அருணாசலம் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...