சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு 780 மில்லியன் டொலர் நிதி!

Date:

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி,780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 300 மில்லியன் டொலர் கடனாக வழங்கவுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ள குறித்த கடன் தொகையானது, இன்று (31) நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த நிதி கிடைப்பதன் மூலம், நாட்டின் அந்நிய செலாவணி சந்தையின் பணப்புழக்கமும், ஸ்திரத்தன்மையும் பரிமாற்ற விகிதத்தின் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...