பதுளை மாவட்டம் முழுவதும் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

Date:

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று 31  ஆம் திகதி  முதல் நடைமுறையில் செயற்படுகின்றது.

இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவில் 31,1ஆம் திகதியிலும் வெளிமடை பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆம் திகதி  வியாழக்கிழமையும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும் ,அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை அன்றும் , எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த படுவதுடன்

அடுத்த வாரம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலும்  9 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று மிகாஹிவுல  பிரதேச செயலாளர் பிரிவிலும் ,எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ரிதிமாலியத்த  பிரதேச செயலாளர் பிரிவிலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி சோர்ணதொட்ட பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இவ்வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும்  கண்டிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம வேண்டுகோள் விடுத்துள்ளார்

பதுளை பிராந்திய செய்தியாளர்

இரா.சுரேஸ்குமார்

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...