மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் | வைத்தியர் ரி.வினோதன் 

Date:

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) மாலை மேலும் புதிதாக 32 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கோவிட்-19 நிலவரம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) மாலை மேலும் புதிதாக 32 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 1667 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் இதுவரை 1684 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர் 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...