திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பது தொடர்பாக திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்!

Date:

திஹாரியில் கொவிட 19 பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது பற்றி துறை சார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலை Helping Thihariya அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு கடந்த (31-08-2021) செவ்வாய்க்கிழமை இரவு லப்சன் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் போன்ற பல அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில் பின்வரும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

1. Dr. M.F.M. SALIHEEN

2. Dr. ROSANA NOUSHAD

3. Dr. FAIK MOHAMED

4. Dr. M.J.M. SHUAIB

5. Dr. SHAZNA ZUFRY

6. Dr. M.R.F. ZAHRIYA

7. Dr. RAZIYA NAWAS

8. Dr. M.T.N. HINAYA

9. Dr. A.M. FAWAS

நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு சார்பாக SUB INSPECTOR S.Z. JAYASIRI அவர்களும் கலந்துகொண்டார்.அடுத்த கட்ட நடவடிக்கையாக Helping Thihariya அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவ சபை மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்களான குழு எதிர்காலத் திட்டங்களை வகுத்து பள்ளிவாசல்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊர் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊர் மக்களின் நலன் கருதி இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...