டெல்டா வைரஸின் திரிபே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் | ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி

Date:

தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின் அடிப்படையில் இந்த தகவல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் 95.8% தொற்றுகளுக்கு டெல்டா மாறுபாடு காரணமாக இருந்தது என்றும் பல்வேறு மாகாணங்களில் டெல்டா பாதிப்பு 84% முதல் 100% வரை காணப்படுவதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு, இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலைக் கண்டறிவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...