இராஜாங்க அமைச்சரின் செயல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!

Date:

சிறை நிர்வாகம் மற்றும் கைதி மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று (17) நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக இருப்பதோடு, பொதுப் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே கடந்த 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...