பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட தீர்மானம்!

Date:

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு சமீபத்தில் கல்வி அமைச்சிற்கு வழிகாட்டுதல்களை பெற்றுக் கொடுத்திருந்தது.அந்த வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, மீண்டும் பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளைய தினம் (24) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...