கட்டாரில் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகைக்கு அனுமதி!

Date:

கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சாதாரண இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
பள்ளிவாசலில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)
அத்துடன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...