மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடுகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக துப்பரவு செய்து நீர் தேங்காத வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும்.வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வயோதிபர்கள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்பு கருதி வீட்டு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் முடக்க நிலை காரணமாக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள், பாடசாலைகள், வழிபாட்டுதலங்கள், பொதுச்சந்தைகள் மற்றும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்த பின்னரே மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது மிகமிக அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...