மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடுகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக துப்பரவு செய்து நீர் தேங்காத வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும்.வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வயோதிபர்கள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்பு கருதி வீட்டு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் முடக்க நிலை காரணமாக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள், பாடசாலைகள், வழிபாட்டுதலங்கள், பொதுச்சந்தைகள் மற்றும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்த பின்னரே மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது மிகமிக அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...