ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை'(decision review system -DRS)அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முடிவு மறு ஆய்வு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸுக்கு அதிகபட்சமாக இரண்டு முடிவு மறு ஆய்வுகளை கோர முடியும் என தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.