ஒத்திவைக்கப்பட்ட HNDE போட்டி பரீட்சையை 30 ஆம் திகதி நடத்த ஆளுநர் உத்தரவு

Date:

உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது.

முன்னதாக கேள்வித்தாள்கள் கசிந்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உயர் தேசிய டிப்ளமோ படித்தவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம்  திகதி(20.10.2021) போட்டி பரீட்சையை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பொதுச் சேவை ஆணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைளில் வெற்றிடமாக  உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் அடிப்படையில் தொடர்புடைய பரீட்சை நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக பரீட்சை எழுதிய பரீடசார்த்திகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த ஆளுநர் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
அந்த விசாரணையின் முடிவு, சம்பந்தப்பட்ட பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தேர்வு எதிர் வரும் 30 ம் திகதி மீண்டும் நடைபெறும்.
 எந்தவொரு பரீட்சார்த்தியும் எதிர்வரும் 27.10.2021-க்குள் அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லை என்றால், அவர் கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் மேலதிக  தகவல்களை  பெறலாம்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...