பால்மா உற்பத்தியாளர்களின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை!

Date:

ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார் .

குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுப்பட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும், நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு மில்கோ மற்றும் பெல்வத்த ஆகிய பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுதாக நேற்று அறிவித்திருந்தது.

இதற்கமைய உள்நாட்டு பால் பால் உற்பத்தியாளர்களுக்காக செலுத்தப்படும் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...