தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன்

Date:

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மாலத்தீவில் நடந்த இறுதி பேட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் சுனில் சேத்ரியும், 50 வது நிமிடத்தில் சுரேஷ் சிங், இறுதி நிமிடத்தில் ஷஹல் அப்துல் சமத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். இறுதியில் 3-க்கு என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியது.

49-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கேப்டன் சுனில் சேத்ரியின் சர்வதேச கோல் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்தார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...