நிர்வாகத்துறை மற்றும் அரச சேவையிலும் நீண்ட கால அனுபவம் பெற்ற மூத்த அதிகாரி அன்ஸார் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவி ஏற்றார்!

Date:

இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீடீர் இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் விவகார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி அஷ்ரப் உடைய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நிர்வாகத் துறையில் நீண்ட முதிர்ச்சியும் ,அனுபவமும் கொண்டவரும் , பல்வேறு நாடுகளில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றி இலங்கைக்கு நற்பெயரை பெற்றுத் தந்தவரும் , வெளிநாட்டு சேவையில் ஒரு மூத்த அதிகாரியுமாவார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...