ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து பயணம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ” Cop: 26 ” ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எவ்வாறு முகம்கொடுத்து செயற்படுவது தொடர்பாக நாடுகள் திட்டமிடும்  ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின்  மாநாட்டுக்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தினை தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் என்று நடைபெறுகின்ற இம் மாநாட்டில் 197 நாடுகளின் அரசத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...