நாட்டில் நேற்றைய தினம் ( 29) கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொவிட் தொற்று உறுதியான 564 பேர் இன்று ( 30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,980 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.