எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதால் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதை போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு இருந்தபோதிலும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என்றார்.அத்தோடு தற்காலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மற்றும் மீன்பிடி துறையினர் இல்லாத பகுதிகளுக்கு மண்ணென்னெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.