வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Date:

இன்று (10) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவத்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவிக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இன்று வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...