காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Date:

காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தின் பின்னர் தப்பியோடியுள்ளார். மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் பலபிடிய வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நிஜாம் மாஸ்டர் அவர்களே உயிரிழந்துள்ளார். அன்னாரது சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் PCR பெறுபேறு வரும்வரையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...