ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலினால் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு!

Date:

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய வகை வைரஸ் உருமாற்றம் பெற்ற கண்டறியப்பட்ட நிலையில், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைகளுக்கு நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் தடை விதித்தது.

இந் நிலையில் அந் நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று (28) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும், தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறியும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/28/israel-to-ban-entry-of-all-foreigners-over-omicron&ved=2ahUKEwjkxaez-br0AhWDT2wGHWdQAYIQFnoECAUQAQ&usg=AOvVaw1CM-g_QBsHSIVJEFTpsypO&ampcf=1

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...