நாட்டின் பல உணவகங்களுக்கு அபராதம்- நீதிமன்றம் உத்தரவு!

Date:

மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட ஏழு உணவகங்களை தலா பத்தாயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமென மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் இன்று (02) வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடீர் முற்றுகையிட்ட போது சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றாது செயல்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்த போது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...