பன்னூலாசிரியரும்,விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மறைந்தார்!

Date:

இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார்.

இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான சிறப்பான இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக முத்திரை பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற ஜாமியத்துஸ் ஸாலிஹாத் (ராம்பூர்) என்கிற பெண்கள் மத்ரஸாவின் முதல்வராகவும் இயங்கி வந்தார். குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரான அவர், மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி அவர்களிடம் பாடம் பயின்றவர். ஏராளமான நூல்களை எழுதி இருக்கின்றார்.

ஆதாபே ஜிந்தகி என்கிற இவரது நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மணமக்களுக்குத் தரப்படுகின்ற அழகான நூலாக இந்தியத் துணைக்கண்டமே கொண்டாடுகின்ற நூலாக இது பிரபல்யம் பெற்றது. வாழ்க்கைக் கலை என்கிற பெயரில் சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)இதனை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன பதியில் நுழைவிப்பானாக.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...