மக்கள் விடுதலை முன்னணி இன்று (24) நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பாணந்துறை, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்விலகஸ்கட , பூண்டுலோயா, கதுரு ஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.