மலரும் புது வருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட விசேட மத அனுஷ்டானம்!

Date:

மலரும் புது வருடத்துக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் இடம்பெறுகின்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கிரிவெஹெர ரஜமஹா விஹாராதிபதி சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த தேரர் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இன்று (31) பிற்பகல் கிரிவெஹெர ரஜமஹா விஹாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், தம்மிந்த தேரரைச் சந்தித்து, தேரரின் நலன்களை விசாரித்தறிந்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், தென் மாகாண ஆளுநர் விலீ கமகே மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...