பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Date:

பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா சென்ற மக்கள், கடும் பனி பொழிவில் சிக்கி திரும்ப முடியாமல் ஸ்தம்பித்து போனதாக கூறப்படுகிறது.

கடும் குளிரிலிருந்து தப்பிக்க கார் கண்ணாடிகளை மூடியதால் மூச்சுத் திணறல் மற்றும் உறை பனி குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்களில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 22 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 122 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...