மெக்சிகோ ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாக கொவிட் தொற்று உறுதி!

Date:

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது முறையாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முழுமையாக குணமடையும் வரை, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அலுவலகப் பணிகளை காணொளி மூலம் மேற்கொள்ளப் போவதாகவும், மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி மாதம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.மெக்சிகோவில் இதுவரை சுமார் 41 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...