மேல் மாகாணத்திலுள்ள அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்!

Date:

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க எந்த தரப்பினரும் தலையிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியிலான தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து கவனம் செலுத்தி மாகாண மட்டத்தில் எட்டு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம்.

இந்த அடையாள நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பது எமது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...